ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 மே, 2023

காலைக் கவிதை

 

இந்த பிரபஞ்சத்தில் 

இயங்கிக் கொண்டு இருக்கும் 

மனிதர்கள் ஏதோவொரு 

நோக்கம் வைத்து ஓடிக் கொண்டே 

இருக்கிறார்கள்...

நான் எப்போதும் அவர்களோடு 

பயணிக்க இயலாது...

ஒரு உணவையே ரசனை இல்லாமல் 

சாப்பிட முடியாதவர்கள் தான் 

ஏதோவொரு நோக்கத்தை வைத்து 

ஓடி ஓடி களைத்து விடுவதை 

தினம் தினம்

பார்த்த பின்பு எப்படி

என்னால் அந்த சுவையற்ற பயணத்தில் 

கலந்துக் கொள்ள இயலும்?

ஏதோ சில தருணங்களை மட்டும் 

ஆனந்தமாக இருப்பதற்கு 

ஒதுக்குவதில் 

எப்போதும் எனக்கு உடன்பாடில்லை...

நான் எப்போதும் நானாக...

என்னோடு என்னை தவிர

நெடுந்தூரம் பயணிக்க இயலாது 

எவராலும்...

இப்போதும் சொல்கிறேன்

சுவையற்ற வாழ்வை எப்படி வாழ்வது????

அதை கொஞ்சம் எனக்கு 

கற்பித்து செல்லுங்கள்!

இல்லை என்னிடம் 

சுவையான வாழ்வியலை 

கற்றுக் கொள்ளுங்கள்!

#காலைகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...