ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 மே, 2023

அந்த நெடுஞ்சாலை பயணத்தில்

 


அந்த நெடுஞ்சாலை பயணத்தில் எப்போதும் ஏதோ அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டே செல்லும் இயல்புடைய நான்

இந்த முறை எவரிடமும் பேச முயற்சி செய்யவில்லை....

மாறாக எதிரில் தென்படுபவரிடம் ஒரு புன்னகை மட்டுமே உதிர்த்து விட்டு என் பயணத்தை தொடர்ந்தேன்...

பெட்ரோல் போடும் இடத்தில் கூட ஏதேனும் அரசியல் பேசாமல் என்னால் வர முடிகிறது இந்த முறை

என்பதை பார்க்கும் போது

எனக்கு நானே அந்நியனானேன்...

ஏனோ இன்றைய பயணத்தில் என்னை எல்லோரும் ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது..

நான் நானாக இயல்பாக பயணிப்பதில் இவ்வளவு

தடைகளா என்று

நான் கொஞ்சம் மலைத்தாலும் இனி இதே கெத்து தான் பின்பற்ற வேண்டும் என்று மட்டும்

மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்...

#நெடுஞ்சாலைபயணம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...