ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 9 மே, 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் அறத்துப்பால் பொருட்பால் அதிகாரத்தில் இருந்து திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தோடு எழுதி வைக்க வேண்டும் என்று அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது வரவேற்க்கத்தக்கது.

இன்றைய சூழலின் அவசியம் கூட... இன்னொரு விசயத்தையும் அவர் சேர்த்து இருக்கலாம்.. தினமும் ஒரு திருக்குறளை அரசு அதிகாரிகள் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அந்த திருக்குறளோடு பொருளையும் சேர்த்து ஒப்பிக்க வேண்டும் என்று சொல்வது மட்டுமல்லாமல் அந்த குறளில் இருந்து தாங்கள் புரிந்துக் கொண்டது என்ன.. குறைந்தபட்சம் இது படி நடக்க சிறு முயற்சியேனும் எடுப்பீர்களா என்று நேரடியாக அந்த அரசு துறை அதிகாரியிடம் மேலதிகாரி கேட்கும் போது மனசாட்சி உள்ள எவரும் தவறு செய்ய கொஞ்சமேனும் யோசிக்க கூடும் அல்லவா...

இதை பற்றியும் மதிப்பிற்குரிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு யோசித்தால் அவரது புகழ் நிச்சயமாக நிலைத்து நீடித்து இருக்கும்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

#திருக்குறள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...