ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 27 ஜூலை, 2022

இந்த இரவு இனிமையானது


 இந்த இரவு

இனிமையானது;

என்னை எவரும் கண்டுக் கொள்ள

மாட்டார்கள்;

நானும் இரவும் பகல் முழுவதும்

தவமிருந்து நாங்கள் பெற்ற

வரமிது...

அந்த தேநீர் கோப்பையோடு

நானும் இந்த இரவும்

சலிக்காமல் பேசி தீர்க்கிறோம்..

தேநீர் தீர்ந்தவுடன்

இருளை அள்ளி பருகுகிறோம்..

இங்கே எல்லாவிதமான

பேச்சுக்களையும் பேசி

தீர்க்கும் போதே 

கீழ்வானம் மெல்ல மெல்ல

வெளுக்கிறது..

மீண்டும் அடுத்த இரவிற்கான

தவத்தை செய்ய நாங்கள் இருவரும்

பிரிய மனமில்லாமல் விடை

கொடுத்துக் கொண்டோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...