அந்த சொற்ப நொடிகள் தான்
நான் பிடித்து
வைத்துக் கொண்டு
விருப்பம் கொண்ட நொடிகள்...
அது ஏனோ என்னிடம் இருந்து
அழுது அடம் பிடித்து
திமிறிக் கொண்டு
செல்கிறது
ஒரு சிறு குழந்தையை போல...
நான் நொடிகளோடு போராட
மனம் இல்லாமல்
என் மனதிற்கு ஆறுதல் சொல்லி அடுத்து வரும் நொடிகளை
சுதந்திரமாக
செல்ல அனுமதிக்கிறேன்!
இங்கே நிரந்தரமற்ற
நொடிப் பொழுதின் தன்மையை
புரிந்துக் கொண்டு
அதன் இயல்பை நசுக்காமல்
பழகிக் கொண்டது
என் குழந்தை மனமும்!
#அந்திமாலைப்பொழுது.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக