இளைப்பாற ஒரு எளிமையான படகு
இந்த பிரபஞ்சத்தின் அழகை
ரசிக்க தன்னை அர்பணிக்கிறது...
இங்கே சிறகுகள் நைந்த பின்பும்
அதன் எச்சங்கள்
என்னோடு இருக்கும் வரையில்
என்னோடு
அந்த உருவமில்லா காதல்
பயணித்துக் கொண்டு
இருக்கும் வரையில்
நான் பேரன்போடு நீண்ட நெடிய
பயணத்தை தொடர்வேன்
என் சிறகுகளை மெல்லிய தென்றல்
தீண்ட...
அதைக் கொண்டு
புறம் பேசாமல் கொஞ்சம்
அமைதியாக என்னோடு சத்தம்
இல்லாமல் பயணியுங்கள்
மானுடர்களே!
இல்லை எனில் சத்தம் இல்லாமல்
என்னைவிட்டு
விலகிச் செல்லுங்கள்...
இங்கே வாழ்தல் அப்படி ஒன்றும்
நீங்கள் நினைப்பது போல
கடினமானது அல்ல...
நீங்கள் சிருஷ்டித்த சிறு உலகிற்கும்
நான் எனக்குள் சிருஷ்டித்து
பயணிக்கும் பெரும் உலகிற்கும்
இங்கே மில்லியன் தூர அளவு
இடைவெளி நிரம்பி வழிகிறது...
அந்த இடைவெளியின் நீட்சியை
நீங்கள் குறுக்க முயலுங்கள்...
என்னை அந்த இடைவெளியை
குறுக்க சொல்லி மன்றாடாதீர்கள்...
இங்கே என் சிறுதுளி நொடியும்
அற்புதமானது
அதை அனுபவித்தல் விடுத்து
வெளியே வர
என்னால் நிச்சயமாக இயலாது....
இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/06/25.
திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக