ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 மே, 2025

அந்த உணர்வற்ற மனிதனின் இதயத்தில் உள்ள நீர்மம்... சிறுகதை..

 


ஒரு கற்பனை கதை:-

அந்த உணர்வற்ற மனிதனின் இதயம்:-

தன் வாழ்வில் நடந்த அந்த நெடுங்சோகக் கதையை

நெடுநேரமாக ஒருவர் அந்த தேநீர் கடையில் சந்தித்த பழக்கமான ஒருவரிடம் உணர்வுபூர்வமாக சொல்லி கொண்டு இருந்ததை 

தற்செயலாக நான் வேடிக்கை பார்க்க நேர்ந்தது!

எனது வேலையை விட்டு விட்டு நான் அதை கவனிக்க வேண்டும் என்று நான் அவர் கதையை கேட்கவில்லை 

அவரின் உணர்வுபூர்வமான உடல் மொழியில் நான் 

உருகி கேட்டு கொண்டு இருந்தேன் என்று சொல்லலாம்...

எதிரே இருந்தவர் அதை சொல்லி முடிப்பதற்குள் 

பல முறை அப்படியா அப்படியா என்று உணர்வற்ற பதிலில் கேட்டுக் கொண்டு இருந்த அந்த எதிரே இருந்த மனிதர் முடிவில் சரி இதை எல்லாம் பெரிதாக நினைத்துக் கொண்டு உனது அன்றாட வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே... அடுத்து என்ன என்று பார் என்று அதே உணர்வற்ற மொழியில் சொல்லி விட்டு நகர்ந்து செல்கிறார்...

அவர் சொன்ன சோக கதையை இவ்வளவு நேரம் கேட்டு கொண்டு இருந்த தேநீர் கடையில் உள்ள தேநீரோ சற்றே அந்த மேசையில் இருந்து 

நகர்ந்து அவரை லேசாக இடித்து என்னை கொஞ்சம் பருகி உனது சோகத்திற்கான ஆறுதலாக இளைப்பாறிக் கொள் என்றது...

இதை கவனித்துக் கொண்டு இருந்த நானோ சற்றே நிம்மதியடைந்து நான் பருகிய காலி கோப்பையை மேசை மீது வைத்து விட்டு அதற்கான தொகையை செலுத்தி விட்டு என் பயணத்தை தொடர்கிறேன் இங்கே உணர்வற்ற மனிதர்களின் இதயத்தில் 

வெறுமனே வெப்பத்தை உமிழ்ந்து விடும் அந்த அதிசய நீர்மத்தின் விசேஷத்தை எவர் வைத்து படைத்தார் என்ற விடை தெரியாத கேள்வியோடு....

#அந்த #உணர்வற்றமனிதனின்இதயம்❤️

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...