எதை செய்தாலும்
திருப்தி இல்லாத
அல்லது அலுத்துக் கொண்ட
மனதிற்கு
யாரோ வீசி எறிந்த
அந்த காகித குப்பையில்
தன்னை மறந்து
தன் வயிற்று அக்னியின்
சிறு பகுதியையாவது
தணித்துக் கொள்ள
சொற்ப சோற்றுத்துகளை
தேடி அலைந்து திரியும்
நாயின் தேடலில் ஏனோ
திருப்திக் கொள்கிறது
இந்த பாழும் மனது!
#அந்திமாலைகவிதை.
நாள்:25/05/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக