அன்றொரு நாள்
இப்படி தான்
ஏதுமற்ற மனதில்
ஏதோ கிறுக்கிக் கொண்டு
இருந்தேன்...
அந்த கிறுக்கலை
கூர்ந்து நோக்கியபோது
அங்கே ஒரு புத்தர் தாமரை மலரில்
பேரமைதியோடு
அமர்ந்து இருந்தார்...
நான் அந்த புத்தரின் முகத்தில்
தோன்றிய ஒளியில்
என் மனதின் ஆக்ரோஷமெனும்
பெரும் சுழலை அடக்கி
ஆனந்தமெனும்
பேருணர்வை உணர்ந்து
மீண்டும் ஏதுமற்ற மனமாகிறேன்...
தற்போது அந்த ஏதுமற்ற மனதில்
எதுவும் கிறுக்காமலேயே
புத்தர் சிம்மாசனமிட்டு
கண்களை மூடி இருந்தார்...
நான் அந்த புத்தரின்
முகத்தில் லயித்து
வாழ்வின் பெரும் தத்துவத்தை
உணர்ந்துக் கொண்டு இருக்கும் போது
எங்கோ இருந்து வந்த
பெரும் சுழல் காற்றில் இருந்து
புத்தரை காப்பாற்ற
அவரை இறுக
அணைத்துக் கொண்டபோது
நான் அங்கே அவருள் கரைந்து போய்
இருந்ததை பார்த்து என் மனம்
ஏதும் செய்ய இயலாமல்
சோகமாக வேடிக்கை பார்த்தது...
இதை எல்லாம் பார்த்துக் கொண்டே
அந்த காலமும்
மெல்ல மெல்ல நகர்கிறது
பெரும் மூச்சை
உதிர்த்துக் கொண்டே...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:04/05/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக