தூர தேச பயணி நான்:-
நான் அந்த ஒற்றை சொல்லில்
வாழ்கிறேன் என்கிறார்கள் சிலர்!
நான் அந்த ஒற்றை சொல்லை மட்டும்
எதிர்கொள்ளாமல்
இருந்து இருந்தால்
இவ்வளவு சோர்வு
எனக்கு இருந்து இருக்காது
என்கிறார்கள் சிலர்...
நானோ
உண்மையில்
எந்த ஒற்றை சொல்லும்
எவரையும் அப்படி ஒன்றும் பதம்
பார்த்து விடுவதில்லை
அந்த கேட்க கூடாதா ஒற்றை
சொல்லை தனக்கான விருந்தினர்
இல்லை என்று தீர்க்கமாக நம்பி
காற்றில் ஏற்றி வழியனுப்பி
வைத்து விட்டு அந்த சாலையில்
உற்சாகமாக பயணியுங்கள்
என்கிறேன்
மிகவும் உற்சாகமாக...
அத்தனை பேரும் என்னை திரும்பி
மெதுவாக கையசைத்து
புன்னகைத்து கடந்து
செல்கிறார்கள்...
நானோ பெரும் விடுதலைக்கான
தேடலில்
மீண்டும் தூர தேச பயணியாக
பயணிக்கிறேன்
இந்த பிரபஞ்சத்தில்...
#இளையவேணிகிருஷ்ணா.
#தூரதேசபயணிநான்.
நாள்: 04/05/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக