ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எவ்வளவோ வாழ்வில்

பயணித்து களைத்து விட்டேன் 

என்றேன்...

இதோ அங்கே இளைப்பாற

ஓரிரு மரங்கள் இருக்கிறது

என்று காலம் என்னை பார்த்து

புன்னகைத்து கடக்கிறது...

ஆறுதலை தேடி காலம்

அலைவதே இல்லை...

நாமோ எவரோயொருவர்

ஆறுதலுக்காக யுகம் யுகமாக

காத்திருந்து கருவறை புகுகிறோம்

மீண்டும் மீண்டும்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 22/02/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...