ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 10 பிப்ரவரி, 2024

விருதுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்?

 


தேர்தல் நெருங்குகிறது...

பல விருதுகள்

பல பேரை 

எதிர் பாராத விதமாக

திக்கு முக்காட வைக்கிறது...

விருதின் தீண்டலில்

நெருப்பென எவரோ ஒரு விருதை 

பெறுபவருக்கு சுடும் போது

விருது கை நழுவி போக

அங்கே உதவியாளர் ஓடோடி வந்து 

விருதின் மாண்பை காக்க...

விருது பெறுபவரோ சற்றே 

நடுநடுங்கி விருதை விட்டு

விலகி மேடையில் இருந்து

கீழே இறங்கும் போது

அந்த விருது ஏனோ மௌனமாக அழுது தொலைக்கிறது...

விருதை அறிவித்த அரசாங்கமோ 

அந்த விருதின் அழுகையும் 

அரசியல் ஆக்கி அதை 

அசிங்கப்படுத்தி

விடும் போது தான்

அந்த விருது நொறுங்கி போகிறது...

இங்கே அந்த விருதின் நிலைக்கு 

யார் ஆறுதல் சொல்லக் கூடும்????

#விருதின்நிலை.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/02/24.

சனிக்கிழமை.

நேரம் முன்னிரவு 9:30.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...