ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எல்லா சுக துக்கங்களையும்

இந்த இரவின் நிழலில்

இளைப்பாற வைத்து விட்டு

நான் கொஞ்சம் களைப்பாறுகிறேன்!

விடியலின் பயணத்தில்

நான் எழுப்பாமலேயே

என்னோடு பயணிக்க காத்திருக்கும்

அவைகளுக்கு விழிப்பு நிலை

எப்போதும் சாத்தியமே...

நான் தான் முதல் நாள் செய்த

அதீத பணிகளின் சோர்வில்

எழாமல் உறங்கி விடுவேன்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...