விடியலை
உணர்த்தும் பறவைகளின்
ஒலியை கேட்பதற்கு
முன்பே ....
சூரியனின் கிரணங்கள்
இந்த பிரபஞ்சத்தை
ஊடுருவுவதற்கு
முன்பே....
எழுந்து நீராடி
அந்த புகைவண்டி
நிலையத்தை அடைந்து
ஒரு தேநீர் கோப்பையை
கையில் ஏந்தி
அங்கே
இங்கும் அங்கும்
நடமாடும் பயணிகளை
வேடிக்கை
பார்த்துக் கொண்டு
இருக்கும் போது...
அந்த புகைவண்டி நிலையத்தில்
பயணிகள் கவனத்திற்கு
என்று சொல்லி...
நீ வரும்
புகைவண்டியின்
பெயரை சொல்லி...
ஒரு மணி நேர
தாமத அறிவிப்பு
ஒன்று காற்றோடு கலந்து
என் செவிகளை அடைந்தது...
அந்த அறிவிப்பில்
நான் இன்னும் ஒரு யுகம்
காத்திருக்க வேண்டுமா
உன் முகம் காண என்று
என் முகத்தில் சோகம்
அப்பிக் கொண்டதை
அங்கே என்னை கடந்து
செல்லும்
பட்டாம்பூச்சி ஒன்று
இலேசாக உராய்ந்து
இத்தனை காலம்
ஊடலில்
பிரிந்து இருந்த நீ...
இந்த ஒரு மணி நேரத்தை
ஒரு யுகமாக யோசிக்கிறாயே
என்று கேலி செய்து செல்ல
நானோ மிகுந்த ஆச்சரியத்துடன்
அது போகும் வழியை
மெய் மறந்து பார்க்கிறேன்...
என் மனதில் ஓடுவதை
உன்னால் படிக்க முடியும் போது
அவளால் படிக்க
முடியாமல் போனதே என்று
ஒரு பெருமூச்சு ஒன்றை
உதிர்த்து விட்டு
யோசிக்கிறேன்..
இந்த பிரிவின் துயரத்தின்
வலியை அந்த பட்டாம்பூச்சி
சிறகின் உரசலில்
சிறிது மறந்து
காத்திருக்கிறேன்...
நீ வரும் அந்த
புகைவண்டியின் சத்தத்தை
உற்று நோக்கி
காத்திருக்கிறேன்...
என் நெஞ்சம் முழுவதும்
நிறைந்த பெரும் காதலோடு...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:15/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக