ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 28 ஜனவரி, 2023

காலத்தின் பெருந்தன்மை

 

காலம் என்னை

சிரிக்க வைக்கிறது;

காலம் என்னை அழ வைக்கிறது;

காலம் என்னை சஞ்சலப்படுத்துகிறது;

காலம் என்னை

கொல்கிறது...

இப்படி அங்கே பல கோடி பேர் 

பிதற்றுவதை கேட்டு

காலம் எந்தவித கோபமும் இல்லாமல்

கொஞ்சம் புன்னகைத்து

அவர்களை கடந்து செல்கிறது...

காலத்தின் பெருந்தன்மை 

குணத்தை பார்த்து

கொஞ்சம் சிலிர்த்து தான்

போகிறேன் நான்...

#காலம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...