ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நேசம் புதுமை..


 நான் எமனை நேசித்து

ஒரு காதல் கடிதம்

அனுப்பி வைத்தேன்..

நெடுநாட்களாக பதில்

இல்லை..

பொறுமை இழந்து

நீ என் கடிதத்தை வாசித்தாயா

என்று பெரும் ஆவலோடு

கேட்கிறேன்..

அதற்கு எமன் உன்னை போல

ஆயிரம் பல்லாயிரம்

கவிதைகள் வந்து உள்ளது..

உனது கடிதமும் பரிசீலனையில்

உள்ளது என்றான்..

எமனை எவர் வேண்டுமானாலும்

நேசிக்கலாம்..

எமன் ஆத்மார்த்தமாக

ஒருவரை நேசித்து

பெரும்  காதலோடு

ஏற்றுக் கொள்ள வேண்டுமே..

நான் அவனின் காதலியாக

காத்திருக்கிறேன்..

அவன் என்றேனும்

என் பெரும் காதலை புரிந்து

ஏற்றுக் கொண்டு

ஒன்றோடு ஒன்றாக

கலக்கும் நாள் தான்

வாழ்வின் பெரும் வரம் எனக்கு..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...