ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 6 ஆகஸ்ட், 2022

வாழ்வின் ரசனை(1)

 


வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்றால் ஏதோ அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு விட்டு பெரிய பெரிய ரெஸ்டாரண்ட் புக் செய்து அங்கே நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஜிஎஸ்டியோடு தொகை வரும் போது புலம்பிக் கொண்டு இனி மேல் இப்படி எல்லாம் வருவதற்கு யோசிக்க வேண்டும் என்று கவலையோடு வாழ்க்கையை ரசனையோடு ரசிக்க வந்து வந்த இடத்தில் புலம்பி தீர்ப்பதா வாழ்வின் ரசனை???

அதுவல்ல வாழ்வின் ரசனை...

இதோ இப்போது இந்த இரவு இங்கே அழகாக தென்றல் என்னை வருட பாதி நிலவு அமிர்தமாக என் மீது கிரணங்கள் பொழிய இந்த இரவின் சூட்சம அமைதி என் மனதிற்குள் ஏதோ இனம் புரியாத இன்பத்தை கொடுக்க அப்படியே மொட்டை மாடியில் ஒரு கயிற்று கட்டிலில் எவரும் அருகில் இல்லாத ஓர் தனிமை ஓர் ஆனந்தமான வரம்... அந்த தனிமை தற்போது உங்களுக்கு கிடைத்து இருந்து இப்படி ஓர் சூழலும் உங்களுக்கு அமைந்து விட்டால் போதும்..அதை விட நீங்கள் இந்த ரம்மியமான சூழலை ரசிக்க வேண்டும் தன்னை மறந்து... இது தான் வாழ்வின் ரசனை...

வாழ்க்கையை ரசிக்க பணம் செலவு செய்து தான் ரசிக்க வேண்டும் என்று இல்லை...இயற்கை நமக்காக தன்னை அழகாக்கி காத்திருக்கிறது.. அந்த அழகை ரசிப்பதை விட்டு விட்டு நாம் செயற்கை அழகை நோக்கி சென்றால் நாம் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரியை நினைத்து புலம்பிக் கொண்டு வாழ்வின் ரசத்தை நாம் இழந்து விடுவோம்...

இந்த பிரபஞ்சம் அற்புதமானது.. நீங்கள் உங்கள் எண்ணத்தை அற்புதமாக்கிக் கொண்டு தயாருங்கள்... அது ராஜ கீரீடை செய்ய காத்திருக்கிறது...

இனிமையான இரவாகட்டும் நேயர்களே..🎻💫🍁🥳🦋

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...