#இன்றையதலையங்கம்
#ஒருவிவசாயியின்துயரம்:- விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வாக்கு கொடுத்து இருக்கிறார்...
இது ஒன்று போதும் அஇஅதிமுக வெற்றி பெற...
கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் விவசாயிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள்..
அதுவும் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது சகோதரர் இரவில் எந்த நேரம் என்று பாராமல் தூக்கத்தை தொலைத்து தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் அவரது மற்ற பணிகளை பார்த்து தந்தையின் உடல் நலன் மிகவும் மோசமான தருணத்தில் அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த குறித்த நாளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு இல்லத்திற்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று மும்முனை மின்சாரம் வந்து விட்டதா என்று பார்த்து விட்டு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்ச வயலில் இறங்கினால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது...
ஒரு மனிதன் விவசாயம் பார்ப்பதே மிகவும் மோசமான நிகழ்வாக இன்றைய காலகட்டத்தில் மாறி விட்டது... அதிலும் இயற்கை இடர்பாடுகள் தாண்டி இடுப் பொருள் விலையேற்றம் ஆள் பற்றாக்குறை விளைச்சல் கைக்கு வந்தவுடன் விலை இல்லை... இப்படி இத்யாதி இத்யாதி சொல்லி கொண்டே போகலாம்... இத்தனை விஷயங்கள் நடக்கிறது...
ஒழுங்கான மும்முனை மின்சாரம் கொடுக்க கூட மனமில்லை... மேடைக்கு மேடை எங்கள் ஆட்சியில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பேசுவதை மக்கள் சரியான கிறுக்குப் தரமான பேச்சாக தான் பார்க்கிறார்கள்..
ஆமாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...
வயலுக்கு நடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தண்ணீர் பாய்ச்ச போனால் அங்கே சாலையை ஆக்கிரமித்து போதை இளைஞர்கள்...
அவர்களை பார்த்து பயந்துக் கொண்டு தான் வயலுக்கு போக வேண்டும்...
நல்லா ஆட்சி நடத்தினீர்கள் ஐயா 🙏
இதே இடத்தில் இதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்...
கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுத்தார்.. நீங்கள் அவரது மகனாக இருந்துகொண்டு விவசாயியை துயர கடலில் மூழ்கடித்தீர்கள்...
ஆட்சி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் இல்லை...
அதற்கு மிக பெரிய அனுபவம் மக்களோடு மக்களாக உண்மையான உணர்வோடு பழகி இருக்க வேண்டும்.. வெறும் போட்டோ சூட் நிச்சயமாக களத்தில் வெற்றி பெற உதவாது...
இங்கே அரசியல் பேச்சு கலையில் தேர்ந்தவர்களை மதித்த காலம் போய் செயலில் யார் மக்களின் உணர்வுகளோடு ஒட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...
#ஒருவிவசாயியின்துயரம்.
#இன்றையதலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:05/04/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக