இத்தனை நாள் தூரமாக நின்று
வேடிக்கை பார்த்த
அமைதி
இன்று எந்த தயக்கமும்
இல்லாமல் என் கைகளில்
வேகமாக ஓடி வந்து
பேரன்பு கொண்டு
என்னை அணைக்கிறது...
ஏதேதோ நிம்மதியை தரும்
என்று இத்தனை நாள்
தேடி அலைந்த
நாட்களை பார்த்து
நான் வெட்கம் அடைகிறேன்...
என் வீட்டின் முற்றத்தில்
நான் நட்டு வைத்து
பாசமாக நீருற்றி வளர்த்த
மரத்தின் நிழலில்
வெகு நாட்களுக்கு பிறகு
என் ஆசுவாசத்தை
கொஞ்சம் புதைத்துக் கொள்கிறேன்...
எங்கோ கேட்ட மரண ஓலங்களின்
சத்தத்திற்கு விடுதலை
கிடைத்த கொண்டாட்டத்தின்
உதிரல்களாக அங்கே
பூத்து குலுங்கும் வசந்தத்தின்
வாசத்தை சுவாசிக்கிறேன்...
இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்த மனதின்
ஸ்திர தன்மையை மட்டும்
காலம் நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொண்டே
இருந்தால் போதும்...
இங்கே என் வாழ்வின்
ஒவ்வொரு நொடியிலும்
புதைந்து கிடக்கும் அமிர்தத்தை
எந்தவித தொந்தரவும் இல்லாமல்
நான் கொஞ்சம் சுவைக்க....
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:13/04/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக