ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முகமூடியின் மாய வித்தை...

 




பிரதிபலிக்க கூடாத 

இடங்களில் எல்லாம் 

உணர்வுகளை 

மறைக்கும் திரையாக 

பலபேருக்கு 

கை கொடுத்த போதும்...


எதிரிகளை எதிர் கொள்ள 

திராணி இருந்தும் 

அவர்களை கையாள 

ஒரு சூழ்ச்சியாக 

மறைந்துக் கொள்ள 

பயன்பட்ட போதும்...


சில நேரங்களில் ஓட்டுகளை 

அறுவடை செய்ய 

நேரத்திற்கு தகுந்தார் போல 

தயார் நிலையில் இருந்து 

அரசியல்வாதிகளுக்கு 

கடும் பிரயத்தனப்பட்டு

பாதுகாப்பு கொடுத்த போதும்...


சில உறவுகளின் குணங்களை 

பிடிக்காமல் 

ஒதுங்கிக் கொள்ள 

விகாரத்தில் தோன்றும் 

கடும் கோபத்தை

மறைத்து கொள்ள 

எளிமையாக உதவிய போதும் 

அவர்களால் 

பாதிப்பு ஏதும் நேர்ந்து விடாமல் 

அதை கண்ணை இமை 

காப்பது போல

காத்து வந்த போதும்...


இப்படியாக அதை பலவகையில் 

சூழ்ச்சியாக 

பயன்படுத்திக் கொள்பவர்களை 

எல்லாம் விட்டு விட்டு 

இதோ இப்போது 

என்னோடு தேவையே 

இல்லாமல் வலுக்கட்டாயமாக 

சண்டை போட்டு 

உன் முகத்திரையை கிழித்து 

தொங்க விடுகிறேன் என்று

முகதிரையே இல்லாத 

என்னை...

என் உணர்வுகளை தூண்டி 

கையறு நிலையில் 

நிற்க வைத்து...


வீதியில் பலபேர் 

வேடிக்கை பார்க்க வைத்து 

விட்டதில் தான்...

முகமூடியே இல்லாத 

அதன் நிறம் என்ன என்று கூட 

தெரியாத நான் 

அந்த முகமூடியின் 

எண்ணற்ற 

மாய வித்தை சக்தியை 

ஒரு வித பயத்தோடு 

அதிர்ச்சியோடு 

உணர்கிறேன்...


இங்கே இந்த சமூகத்தில் 

எதையும் கண்டுகொள்ளாமல் 

சூழ்ச்சி பற்றிய 

எந்தவித எண்ணங்களும் 

இல்லாமல் பயணிப்பது 

மிக மிக 

கடினமான ஒன்று என்று... 

என் நிலையை 

அங்கே பலமுகமூடிகள் 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 

வேடிக்கை பார்த்தது மட்டும் அல்லாமல் 

சிரித்தும் வைப்பதை 

நான் கொஞ்சம் எரிச்சலோடு 

கடந்து போனேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/04/16.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகமூடியின் மாய வித்தை...

   பிரதிபலிக்க கூடாத  இடங்களில் எல்லாம்  உணர்வுகளை  மறைக்கும் திரையாக  பலபேருக்கு  கை கொடுத்த போதும்... எதிரிகளை எதிர் கொள்ள  திராணி இருந்த...