தீர்ந்துக் கொண்டே
வரும் நாட்களில் எல்லாம்
நான் என் பெரும் பிரயத்தனங்களை
யாரோ ஒருவரின் குழந்தை
என் கைகளை பிடித்து
வருவதை போல
அதை கொஞ்சம் கொஞ்சமாக
கை விடுகிறேன்...
சிறு வயதில்
ஓடி திரிந்த நாட்கள் எல்லாம்
தற்போது கனவாக
தேய்பிறை நிலவாக
கலை இழந்து
என் மனதின் ஓரத்தில்
தூசி படிந்து கிடக்கிறது...
என்றோ நான் வாங்கிய விருதுகள்
எல்லாம் என்னை பார்த்து
இத்தனையும்
உன் தொலைதலுக்கு பிறகு
என்னாகும் என்று
பெரும் அச்சத்தோடு
கேள்வி எழுப்புகிறது...
என் அடையாளங்கள் என்று
நான் கர்வப்பட்ட அத்தனையும்
என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களாக மிதிபட்டு
கிடக்க வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட போவதை நினைத்து
தற்போது
நான் கொஞ்சம் கொஞ்சமாக
உணர்கிறேன்...
இத்தனை நிகழ்வுகளையும்
அசைப்போடும் தருணத்தில்
அந்த மூச்சை கவர்ந்து
செல்பவன் என் கண்களுக்கு
காட்சி கொடுத்து
மிரள வைக்கிறான்...
இன்னும் என்ன
காலம் உருட்டும்
பகடைக் காய்
உருட்டலில்
உன் கடைசி உருட்டலும்
கடந்த நொடிகளில்
முடித்துக் கொண்டது...
இனி நாம் நம் பயணத்தை
தொடரலாமா என்று
கேட்ட கேள்வியில் தான்
நான் விழிப்படைந்து
அதிர்ச்சி அடைந்தேன்...
நான் வாழ்ந்த வாழ்வின்
அர்த்தங்கள் எல்லாம்
வெறும் பகடைக் காய்களுக்குள்
தஞ்சம் புகுந்துக் கொண்ட
நிகழ்வி
ன் சத்தியத்தை...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:18/04/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக