எந்தவித முன்னறிவிப்பும்
இல்லாமல்
உன் வாழ்வின் அத்தனை
அத்தியாயங்களும்
முடிவுக்கு வந்து விட்டது
என்கிறது அங்கே காலம்...
நான் அந்த கூற்றை கேட்டு
ஆதரிக்கவும் இல்லை
எதிர்க்கவும் இல்லை...
இது வரை நான் எழுதிய
அத்தியாயங்கள்
வாசித்து விட்டு
அங்கே அந்த வாசகர்கள்
இறுதி அத்தியாயத்தை
சுவாரஸ்யமாக எழுதி முடித்து
விடுவார்கள்...
அது நான் எழுதி வந்த கதையின்
அத்தியாயத்தை விட
இன்னும் சிறப்பாக இருக்கும்...
அது பற்றிய கவலை எனக்கு எதற்கு இனி?
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:18/04/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக