ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 3 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்...

 


இன்றைய தலையங்கம்:-

ஒரே இடத்தில் இருந்தால் பற்று வரும் என்று தான் துறவிகள் இந்த பிரபஞ்சத்தில் ஒரே இடத்தில் நில்லாமல் தங்காமல் ஓடிக் கொண்டே இருந்தார்கள்.. ஆனால் அதற்கு ஒரு விதி விலக்கும் இருந்தது... மழைக் காலத்தில் மட்டும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்று...இதை நான் ஏன் தற்போது சொல்ல வருகிறேன் என்றால் தற்போது வரை பிரதமராக இருக்கும் நமது நரேந்திர மோடி அவர்களுக்கு பதவி மீது பெரும் மோகம் என்று தான் சொல்ல வேண்டும்...அதை அந்த கட்சிக்காரர்கள் தேச பற்றாக காட்ட போராடுகிறார்கள்...எதுவாகவோ இருந்து விட்டு போகட்டும்...நாளை அதாவது விடியும் போது ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகள் பொழுது சாயும் போது ஏறக்குறைய தெரிந்து விடும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று... ஒரு வேளை தற்போது மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று விட்டால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகார போதை தலைக்கு ஏறி மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஏதேதோ செய்து விடவும் வாய்ப்பு உள்ளது... ஆனால் எதிர் கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரண மக்களின் பிரார்த்தனை... ஏனெனில் பெரும்பான்மை பிஜேபிக்கு தற்போது கிடைத்து விட்டால் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவிற்கும் எதிர் கட்சிகளின் ஒப்புதல் தேவைப்படாது... அவர்கள் ராஜ்ஜியம் தான்... அதனால் எதிர் கட்சிகள் நிறைய இடங்களை பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன்...

ஆனால் காங்கிரஸ்+கூட்டணி கட்சிகள் சில பல பிராந்திய கட்சிகள் வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்... ஆனால் இதெல்லாம் குதிரை பேரமாக பிஜேபி செய்வதற்கு ஏற்கனவே தயார் நிலையில் தான் இருக்கும்...

ஆனால் விடியும் பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்... காத்திருப்போம் 🍁.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...