ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூன், 2024

நானும் நானும்...


தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு

வந்துக் கொண்டே இருந்தது....

அழைத்தவர்கள் பெரும்பாலும் நேற்று நீங்கள் காதலுக்கு சொன்ன பெரும் உரையில் லயித்து விட்டேன் என்றார்கள்...

எனக்கு ஒன்றும் புரியவில்லை..

நானா காதலை பற்றியா சிலாகித்து பேசினேன் என்றேன்..

ஆம் தாங்கள் தான் என்றார்கள் விடாப்பிடியாக...

ஓ அப்படியா நன்றி என்று சொல்லி விட்டு எந்தவித சலனமும் இல்லாமல் நகர்கிறேன் நான்..அவர்களோ ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டார்கள்.. எனக்கு மட்டும் தான் தெரியும் நான் காதலை பற்றி சிலாகித்து பேசி இருக்கலாம்.. அது ஒரு அடர்த்தியான மழை பொழியும் சில மணி நேரம் போன்றது எனக்கு என்று அவர்களுக்கு தெரிய நியாயமில்லை.. அடர்த்தியான மழை பொழிந்து விட்டு ஒரு பேரமைதி நிலவுமே அப்படி தான் எனக்கும் காதலுக்கும் உள்ள புரிதல்.. நல்ல வேளையாக இப்போது இன்னும் அதைப் பற்றி விரிவாக பேசுங்கள் என்று என்னை தொந்தரவு செய்யாமல் நகர்ந்து விட்டார்கள்.. உண்மையில் தற்போது அப்படி கேட்டு இருந்தால் நான் காதலை பற்றி ஏதேதோ உளறி இருப்பேன்.. அவர்கள் எனது நேற்றைய உரையை மீண்டும் கேட்டு ஒப்பீடு செய்து கொண்டு அதை பெரிய விவாதம் ஆக்கி இருப்பார்கள்... இங்கே எனது அடுத்த உரைக்கு அது மிகவும் பெரும் தடையாக இருந்து இருக்கும்..

#நானும் #நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...