ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 10 ஜூன், 2024

நள்ளிரவின் மெல்லிய குரல்

 


நான் எப்போதும் வெற்றியை பற்றியோ தோல்வியை பற்றியோ கவலைப்பட்டதே இல்லை...

வெற்றியோ தோல்வியோ அது சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்... ஆனால் அந்த சலனத்தை சொற்ப வினாடிகளிலேயே கொன்று புதைத்து விட்டு மாற்று வேலைக்கு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சென்று விடுவேன்...

இது தான் நான் பயணிக்கும் சாலை என்று எவரிடமும் அகங்காரம் கொண்டு பேசியது இல்லை... ஏனெனில் சில மணித்துளிகளில் என் பயண சாலை மாறும் என்பது எனக்கு நன்றாக தெரியும்...

எனக்கு பிடித்தது என்று எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது... 

ஆனால் தற்போது இல்லை...

நான் இந்த காலத்தில் 

பயணிக்கிறேன் 

அவ்வளவு தான் ...

இது தான் நான் வாழ்வில் 

கற்றுக் கொண்ட அல்லது காலம் 

கற்பித்த கட்டணம் இல்லாத பாடம் 

என்று சொன்னால் அது மிகையல்ல....

#இளையவேணிகிருஷ்ணா.

#நள்ளிரவின் #மெல்லிய #குரல்.

நாள் 10/06/24/திங்கட்கிழமை/

முன்னிரவு 11:15.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...