ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 10 ஜூன், 2024

ஆத்ம விசார கவிதை 🍁


என்னோடு பயணிக்கும் 

அந்த அபூர்வமான சிறு துகள் 

என்னுள் இருக்கும் 

ஆயிரம் துளைகளில் 

எங்கேயும் வழிந்து ஓடி விடாமல் 

பயணிக்கிறேன்...

காலமோ எனக்குள் இருக்கும் 

அந்த அபூர்வ துகள் 

 எங்கேயும் சிந்தி சிதறி விடாதா 

என்கின்ற ஏக்கத்தோடு 

என்னை துரத்தி 

பயணிக்கிறது...

நான் அந்த அபூர்வ துகளின் 

உரிமையாளர் இல்லை என்று 

எவரேனும் அந்த காலத்திற்கு 

புரிய வையுங்கள்...

#ஆத்ம தத்துவம் ✨.

#இளையவேணிகிருஷ்ணா/

நாள் 10/06/24/திங்கட்கிழமை/

முன்னிரவு 10:55.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...