ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 ஜூன், 2024

பிரபஞ்ச விதிகளுக்கு அப்பாற்பட்டவள்

 


நாளை உனக்கு என்ன நடக்கும் என்று உனக்கு தெரியுமா என்று காலம் என்னிடம் கேள்வி கேட்டு துளைக்கிறது...

நாளை எனக்கு எது நடந்தால் எனக்கென்ன 

எது நடந்தாலும் நீ என்னோடு 

பயணிப்பது மட்டும் உறுதி என்று தெரியும்...

நான் இந்த பூமியில் வாழ்ந்தாலும் இல்லை நீ எங்கே கடத்தி செல்கிறாயோ 

அங்கே சூட்சமமாக எனை இறுக பற்றிக் கொள்வாய் உன் கரங்களால்...

பிறகென்ன பயம் எனக்கு?

என்ன உனக்கு பயம் இல்லையா என்றது ஆச்சரியமாக ஆமாம் பயமில்லை என்றேன்...

நான் உனது கரங்களை செல்லும் வழியில் விடுவித்து விட்டால் என்றது...

அப்போதும் பயமில்லை 

நான் விழுவதும் ஏதோவொரு விண்மீன் கூட்டத்தின் இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு கிரக வெளியிலோ அல்லது நிலத்திலோ தானே விழ போகிறேன்...

நிச்சயமாக எங்கே விழுந்தாலும் அதற்கும் எனக்கும் உள்ள பந்தத்தை 

ஞாபகப்படுத்தி அதன் அரவணைப்பில் வாழ்ந்து விட்டு போய் விடுவேன்...

இந்த பிரபஞ்சமோ அல்லது அந்த வான் உலகமோ 

எதுவாக இருந்தாலும் எனக்கும் அதற்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஒன்று எப்போதும் 

பயணிக்கும் வரை நான் பயமற்றவளாகவே சஞ்சரிப்பேன்...

ஏனெனில் நான் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பயணி ✨🚣🚣🚣🚣.

#இரவுகவிதை🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/06/24/புதன் கிழமை 

முன்னிரவு 10:35.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...