ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

வெறுமை

அன்பர்களே வணக்கம்.
               நாம் இப்போது பார்க்க இருப்பது வெறுமை.வெறுமை இந்த உணர்வு எப்போதாவது நமக்கு தோன்றுவது உண்டு. ஏன் அப்படி தோன்றுகிறது என்று நமக்கே தெரியாது. ஆனால் அந்த உணர்வு வரும் போது நாம் நம்மை கேள்வி கேட்டு கொள்வோம். நாம் வாழ்ந்த வாழ்க்கை சரிதானா என்று. அப்போது தான் நாம் உண்மையான பொருளை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.
             வெறுமை நம் வாழ்வில் நாம் நன்றாக இருக்கும் போதே தோன்றுகிறது. வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்காமலே போய் விடுவோமோ என்று தோன்றும். ஆனால் நாம் நமது கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு இருக்கும் போது தோன்றுகிறதே அதுதான் ஏன் என்று நமக்கு பிடிபடாது.
     இந்த உணர்வு தோன்றும் போதுதான் நாம் ஆத்மஞானத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம் என்று அர்த்தம். ஏனெனில் நாம் நமது அனைத்து கடமைகளையும் முடித்துவிட்ட பிறகு கண்டிப்பாக நமக்கு இந்த உணர்வு தோன்றினால் நல்லது என்றே நான் சொல்வேன்.
        நாம் நமது சம்சார சாகரத்தில் மூழ்கி மூழ்கி களைத்து விட்டோம். நாம் நமது பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து அவர்கள் பிள்ளைகளையும் பார்த்து விட்டோம். பிறகு நாம் கண்டிப்பாக அவர்களை விட்டு நீங்கி ஆத்ம ஞானத்தை தேடுவதே முறை.
      ஆனால் நாம் என்ன செய்கிறோம். மீண்டும் ஒரு சம்சாரத்தில் நுழைந்து விடுகிறோம்.இதில் தான் நாம் தவறு செய்கிறோம். இன்றைய பெற்றோர்கள் நிலையை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. இவர்கள் பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தால் அங்கே மனைவியோடு சென்று விடுகிறார்கள். பிறகு பிள்ளை உருவாகும் போது தனது பெற்றோரை அங்கே கூட்டி செல்கிறார்கள். எதற்காக கூட்டி செல்கிறார்கள். எல்லாம் சுயநலம். தனது பிள்ளைகளை பொறுப்பாக பார்த்து கொள்ள ஒரு ஆள் தேவை.அதற்காகத்தான்.
      பெற்றோர்களும் கடைசி காலத்தை நிம்மதியாக ஆன்மீக விசயத்தில் அல்லது தனக்கு பிடித்த விசயத்தில் ஈடுபடலாம் என்று நினைத்து ஒரு கனவை கண்டு கொண்டிருக்க அங்கே இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வரும். அடுத்த மாதம் நான் விமானத்தில் உங்களுக்கு டிக்கெட் போட்டிருக்கிறேன் நீங்கள் கண்டிப்பாக மறுப்பு ஏதும் சொல்லாமல் வர வேண்டும் என்று.
       இவர்கள் முடிவுகளுக்கு கால அவகாசம் தரப்படுவதில்லை.மேலும் இவர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை மதிப்பதே இல்லை. இப்படி இருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு ஏதோவொரு வெறுமை தோன்றுவது இயல்பு தானே.இவர்கள் ஒன்றும் ஜடம் இல்லையே எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு.
        பெற்றோர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கனவுகள் உண்டு என்பதை இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் மதிப்பதே இல்லை அவர்கள் உங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார்கள்.நன்றாக கவனனியுங்கள்.இந்த பதிவு பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தவர்களுக்காக.
            அன்பான இளைஞர்களே நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக உங்கள் பெற்றோர் கனவுகளை சிதைக்காதீர்கள்.வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்தளே நீங்கள் முதலில் உங்கள் பெற்றோர் விருப்பத்தை நாசுக்காக தெரிந்து கொண்டு முடிவெடுங்கள்.ஏனெனில் அவர்கள் அங்கே வந்து திருப்தியாஇ கண்டிப்பாக இருக்கப்போவது இல்லை. பழகிய இடத்தில் நாலுபேர் இங்கே அவர்களோடு பழகியவர்கள் இருப்பார்கள். மேலும் புது இடத்தில் மொழி தெரியாத இடத்தில் வீடே சிறையாகவும் அவர்களுக்கு தோன்றும். இங்கேயும் அப்படி தான் என்றாலும் கண்டிப்பாக குறைந்த பட்சம் காலை மாலை அவர்கள் தெருவில் வெளியே உட்கார்ந்து இருப்பார்கள். அங்கே அப்படி வெளியே விடமாட்டீர்கள்.மேலும் அந்த நாட்டில் சட்ட திட்டங்கள் எப்படியோ.அதற்கேற்ப இவர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு பிடிப்படாது.அதுவே உங்களுக்கு எரிச்சலை தந்துவிடும்.அதனால் நீங்கள் கொஞ்சம் கடுமைக்காட்ட அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அழுதுவிடுவார்கள்.
         அப்போது அவர்களையும் அறியாமல் ஒரு வெறுமை தோன்றும். அப்போது அவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள். தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோமோ என்று ஆதங்கம் அடைவார்கள். அதனால் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை உண்டு.நீங்கள் அதில் தலையிடாமல் முடிந்தவரை அவர்களை ஆனந்தமாக வாழ விடுவோமே.
            என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.நீங்கள் புரிந்து கொண்டு நீங்களும் சம்பந்தப்பட்டவர்களையும் ஆனந்தமாக வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்👐👐🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...