ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஒடுக்குதல்

அன்பர்களே வணக்கம்.
          நாம் தற்போது பார்க்க இருப்பது ஒடுக்குதல்.இதைப்பற்றி நாம் பேசும் போது ஒருகாலத்தில் நமது சமுதாயத்தில் ஒருபிரிவினரை நமது சமுதாயம் எவ்வாறு ஒடுக்கி அடக்கி ஆண்டது என்பது நம் கண் முன்னால் வந்து போகும். ஆனால் நமது சமுதாயத்தை சீர்திருத்த நிறைய தலைவர்கள் தோன்றி அந்த தன்மையை மாற்றினார்கள் என்பது வரலாறு.
      சரி நான் இப்போது பேசப்போவது அதுவல்ல .பின் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்களா. ஆம் நான் பேசப்போவது நமது மன ஒடுக்கத்தை பற்றி. அட போங்க .உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ஏன் எங்களை போட்டு இப்படி படுத்தி எடுக்கிறீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. ஆனால் என்ன செய்வது.இறைவன் என்னை தூதாக அனுப்பி உள்ளான் உங்களை எல்லாம் காப்பாற்ற.😃நான் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.😀
          சரி விசயத்திற்கு வருவோம். மனதை ஒடுக்குதல் என்றால் நல்ல தடிகளையும் பல மரகட்டைகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளட்டுமா என்று நீங்கள் நக்கலாக
கேட்பதும் என் காதில் விழாமல் இல்லை. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் அமைதியாக உங்கள் மன ஓட்டத்தை கவனிக்க வேண்டும். அவ்வளவு தான்.
      என்ன விளையாடுகிறீர்களா.அமைதியாக எண்ண ஓட்டத்தை கவனித்து வந்தால் மனம் அப்படியே பவ்யமாக ஒடுங்கி என்ன எஜமானனே.நீங்கள் உத்தரவு தாருங்கள். அதை செய்கிறேன் என்று கைகட்டி நிற்குமா என்று நீங்கள் கேட்கிறீர்கள்.அப்படி தானே.ஆம் கண்டிப்பாக கேட்கும். ஆனால் உடனே எல்லாம் அந்த அதிசயம் நடந்து விடாது.அதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.
     நிறைய பொறுமை காத்தால் நீங்கள் உங்கள் மனதை ஒடுக்குவது மட்டும் இல்லை.நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அதை அப்படியே துல்லியமாக நிறைவேற்றும்.இது நிச்சயம்.
         முதலில் அப்படி இப்படி தான் இருக்கும். பிறகு மனம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்குவதை உங்களால் உணர முடியும். நீங்கள் எண்ண ஓட்டங்களைவிலகி நின்று கவனித்து கொண்டே வாருங்கள்.
            எந்தெந்த விசயத்தில் மனம் அதிகம் ஓடுகிறது என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். பிறகு அந்த விசயத்தால் உங்களுக்கு உங்கள் வேலைக்கு மனதிற்கு எந்த வித பாதிப்பு என்பதையும் குறிப்பெடுங்கள்.அந்த எண்ண ஓட்டத்தில் தோன்றும் விசயத்தால் நீங்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறீர்கள் என்று குறிப்பெடுங்கள். அந்த விசயத்தால் நீங்கள் அதிகமான பாதிப்பு அடைகிறீர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக அந்த விசயத்திலிருந்து விலகி அதற்கு மாற்றான வழியை கண்டுபிடித்து தான் ஆக வேண்டும்.
    மேலும் மனதை முடிந்த வரை எண்ண ஓட்டங்கள் அதிகமாக இல்லாமல் குறைத்து கொண்டே வாருங்கள். ஏனெனில் எண்ண ஓட்டம் அதிகமாக ஆக நீங்கள் மனதை ஒடுக்குவது மிகவும் சிரமமான காரியம் தான்.
   எண்ண ஓட்டத்தை ஒழுங்கமைக்க ஏதாவது வேலை செய்து கொண்டே இருங்கள். ஏனெனில் உடல் ஓய்வாக இருந்தால் தான் நாம் எண்ண ஓட்டத்தால் பாதிக்கப்படுவோம்.
       உங்கள் மனதில் நல்ல விசயங்களை போட்டு கொண்டே வாருங்கள். பிறகு பாருங்கள். நல்ல நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு உங்கள் மனம் தேவையில்லாத எண்ணங்களில் இருந்து ஒடுங்கி உங்களுக்கே தெரியாமல் நல்ல பல விசயங்களை சாதிப்பதற்கு உதவும்.
    என்ன அன்பர்களே.நான் எனக்கு தெரிந்த வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.நீங்கள் உங்கள் மனதிற்குள் இந்த எளியேனின் வழிமுறைகளை செலுத்தி முயற்சி தான் செய்து பாருங்களேன். பலன் நிச்சயம் கிடைக்கும்.
     சரி நேயர்களே  மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரை எப்போதும் போல🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...