எப்படியும் ஏதோவொரு அரிதாரம்
பூசிக் கொண்டு வாழும் வாழ்வு தானே
இதில் எனக்கு பிடித்த கதாபாத்திர
அரிதாரம் பூசிக் கொண்டு
வாழ்வதில் அப்படி என்ன தான்
உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று
கேட்கும் போதெல்லாம்
அதெப்படி நீ மட்டும்...
என்று ஏதேதோ காரணங்களை
சொல்லி இப்படி தான்
நீ இருக்க வேண்டும் என்று
மணிக்கணக்கில்
எனக்கு போதித்து
கட்டளையிட்டு
செல்கிறார்கள் அவர்கள் ....
நானும் அமைதியாக
அவர்கள் போதித்த போதனையை
பொறுமையாக
கேட்டுக் கொண்டு
மீண்டும்
ஆழ்ந்த அமைதியோடு
எனக்கான கதாபாத்திர அரிதாரத்தில்
மூழ்கி விடுகிறேன்...
எந்தவித உறுத்தலும் இல்லாமல்...
இங்கே வாழ்தல் என்ற பெயரில்
வறட்சியான வாழ்தலே
சிறந்த அரிதாரம் என்று
பொருள் கொள்பவர்களை
நானும் வெறுமனே புன்னகைத்தே
கடந்து விட வேண்டியுள்ளது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக