ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜனவரி, 2026

பேரமைதிக் கொண்ட இரவின் நிழலில்...

 


பேரமைதி கொண்ட இரவின் நிழலில்

அங்கே இருஜோடி காதல் பறவைகள்

உறக்கம் பிடிக்காமல்

ஏதேதோ கதை பேசி

என் அறையின் கதவை தட்டி 

என்னை எழுப்பும் வேளையில்

உன் நினைவு மீண்டும் துளிர்த்து

கண்களில் கண்ணீரோடு

உறக்கம் வராமல்

நீயும் நானும்

அன்றொரு நாள்

இப்படி கதை பேசி

கழித்த இரவுகள்

எத்தனை எத்தனை

என்று வியந்து 

மீண்டும் கண்களில் கண்ணீரோடு

ஏங்கி

அந்த பறவைகள்

பிரியாதிருக்க

நீண்ட பிரார்த்தனை 

செய்துக் கொள்கிறேன்...

இங்கே பேரன்பும்

சில இரவுகளால்

களவாடப்படக் கூடும் என்ற அனுபவத்தால்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/01/26.

நேரம் இரவு படர்ந்த வேளையில் 10:23

புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...