தேவையில்லாத காணொளிக்கு லைக் மற்றும் கமெண்ட் மற்றும் பகிர்தல் போன்ற விஷயங்களை தயவுசெய்து செய்யாதீர்கள்.. அவர்களுக்கு சமூக வலைத்தள போதையை ஏற்றாதீர்கள்! ஒரு காணொளி ஒரு கபடமற்ற உயிரை மாய்த்து இருக்கிறது...
எதை எடுத்தாலும் பெண் சுதந்திரம் என்ற எல்லைக்குள் அடைக்காதீர்கள்!அது தான் சில வக்கிரம் பிடித்த பெண்களுக்கு வசதியாக போய் விடுகிறது...
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நீதி தான் இங்கே ...
ஆனால் தற்போது பெண்களை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் பல பெண்கள் தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஆதாயம் காண்கிறார்கள்...
தயவுசெய்து மனிதர்களாக பிறந்த நாம் சில ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்...
பேருந்தில் எந்த பெண் காணொளி எடுத்து நமது குடும்பத்திற்கு உலை வைப்பாளோ என்று நல்ல பல ஆண்களை நினைக்க வைத்து விடக்கூடாது...
அந்த பெண்ணின் காணொளி மோகம் தான் இதற்கு காரணம்... எவ்வளவு அலங்கோலமான சமுதாயத்தில் வாழ்கிறோம்... காணொளி மோகம் அதனால் கிடைக்கும் போலியான அடையாளம்..இவை எல்லாம் சமுதாயத்தை மெல்ல தின்று தீர்க்கும் நஞ்சு...
இது ஆரோக்கியமான விஷயம் இல்லை...
#காணொளியும்கபடமும்
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக