ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 28 ஜனவரி, 2026

சொல் வனம் எனும் அடர்ந்த காட்டில்...

 


என் நெஞ்சமெங்கும்

அடர்ந்து கிடக்கிறது

உனக்கான சொல் வனம் எனும்

அடர்ந்த காடுகள்...


அந்த நிழலில் நீ இளைப்பாறி

என் மடியில் சாய்ந்து...

அந்த மரத்தில் இருந்து

மெல்ல மெல்ல 

மென்மையாக விழுந்து

கவிதை மலர்கள்

உன்னை அலங்கரிக்க

நீ சிறிது நேரம் ஏதும் பேசாமல்

உன் பார்வையால் 

என் கண் பார்வையை 

ஊடுருவி ரசித்து

சிறிது நேரத்தில்


நிர்மலமான மனதில்

அமைதி பொங்க..

துயில் கொள்கிறாய்...

அந்த காட்சியை ரசித்துக்கொண்டே

அங்கே வசித்து வரும்

குயில்கள் 

தன் இனிமையான குரலால்

மென்மையாக தாலாட்ட...


நீ அந்த இசையில் மயங்கி

ஆழ்ந்த துயில் கொள்ள

நான் அந்த அடர் வனத்தை

பேரமைதிக் கொண்ட

மனதோடு பார்வையிடுகிறேன்...


உன் துயில் கொள்ளும் நிலை

சிறிதேனும் 

கலைந்து விடக்கூடாதே என்ற 

பெரும் தவிப்போடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/01/26.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...