ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 18 மார்ச், 2024

இரவு கவிதை 🍁


என்னிடம் பாவமும் இல்லை!

புண்ணியமும் இல்லை!

நான் வாழ்வெனும் நதியில்

பயணிக்கும் போது

அகப்படும் நிகழ்வுகளை

அந்த நதியின் கரையில்

விட்டு நிச்சலனமாக 

பயணிக்கும் போது

தெளிந்த நீரின் சுவையை தவிர

வேறெதுவும் என்னோடு

நெருங்கி பயணிக்க முடியாமல்

அங்கே சில பல நிகழ்வுகள்

என்னை புறங்கூறி தன் மனதை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கரையில் ஏங்கி விடை பெறுகிறது...

அதற்கு நான் என்ன செய்ய முடியும்???

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/03/24.

திங்கட்கிழமை.

நேரம் முன்னிரவு 9:00மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...