ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 7 மார்ச், 2024

நிச்சலனமான அந்த வேளையில்...

 


நிச்சலனமான அந்த நொடியில்

அந்த ஏகாந்த பறவையின்

ஒரு சிறு குரல் தான்

இந்த பிரபஞ்சத்தின் உயிர்ப்பை

எனக்கு மீட்டி தருகிறது!

எங்கோ தொலைந்து விட்டதாக

நினைத்தேன் என் நிம்மதியை...

நல்ல வேளை அப்படி எதுவும்

நடக்கவில்லை...

இதோ அந்த பறவையின் சிறகு

என்னை உரசி நான் அமர்ந்த

அந்த நிலத்தின் மரத்தடியில்

இளைப்பாறுகிறது

என்னை பார்த்து...

நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

நாள்:07/03/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...