ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 4 மார்ச், 2024

அரசியல் ஜாம்பவான்...

 


இன்றைய தலையங்கம்:- ரொம்ப நாளைக்கு பிறகு முன்னாள் பீகார் முதல்வர் லல்லுவின் மேடை பேச்சு கேட்கிறேன்...லல்லு பிரசாத் யாதவ் ஒரு அரசியல் ஜாம்பவான்... அவரின் பேச்சு எப்போதும் சிலேடையாக மிகவும் ரசிக்கும் படியே இருக்கும்... ஏன் அவர் காங்கிரஸோடு கூட்டணி வைத்து போட்டி இட்ட தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த தருணத்தில் தேர்தல் முடிவுகள் பற்றி தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறார் அந்த தேர்தலில் அவருக்கு மிகவும் மோசமான தோல்வியை கொடுத்தது.. தேர்தல் நடைபெற்ற வருடம் எனக்கு நினைவில்லை.. ஆனால் இந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அவரது மகள் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் மோசமாக வருவதை பார்த்து மிகவும் சோகமாக இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே மகளிடம் கேட்கிறார்...அட இதற்கு போய் ஏன் இவ்வளவு சோகம்... மதியம் என்ன உணவு தயார் செய்ய போகிறாய் போ போ எனக்கு பசி வந்து விடும் என்று மிகவும் யதார்த்தமாக கடந்தவர்... எனக்கு எப்போதும் அவரின் எதற்கும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத தன்மை மற்றும் சிலேடை பேச்சு மிகவும் பிடிக்கும்...இதை படிக்கும் போது இங்கே சில பேர் மாட்டு தீவன ஊழலை பற்றி பின்னூட்டம் இடலாம்... ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மிகவும் நேர்மை வாதிகளா என்று கேட்கிறேன்... தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா... என்கின்ற திரையிசை பாடல் தான் நினைவுக்கு வருகிறது... நிச்சயமாக இந்த வயதிலும் இவர் எவ்வளவு உற்சாகமாக மேடையில் பேசுகிறார்.. அரசியல் பழிவாங்கல் அத்தனை இருந்தும் தளராத மிக பெரிய ஜாம்பவான் லல்லு தான்...

அவருக்கு எனது ஆத்மார்த்தமான வணக்கங்கள் ✨🙏✨💐.

#இன்றையதலையங்கம்.

இளையவேணி கிருஷ்ணா.

#ஜாம்பவான்.

நாள் 04/03/24.

திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...