ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

அந்த வஸ்துவின் இறப்பில்...


அந்த எவரின் தேடலுமற்ற

இரவொன்றில்

மெழுகுவர்த்தியின் தீபத்தில்

தீயொன்று பற்ற வைத்து

அந்த வஸ்துவோடு காதல்

உறவாட எத்தனித்த போது

அந்த தேநீர் கோப்பையோ

எந்த பொறாமையும் இன்றி

அமைதி காத்து

என் ரசனையின் நிழலில்

இளைப்பாறி காத்திருந்தது...

அந்த வஸ்துவின் இறப்பின்

சுடும் துளிகளுக்கு பிறகு

அதனோடு காதல் உறவாட

நிச்சயமாக நான் வருவேன் என்று...

#இரவுகவிதை.

நாள் 15/03/24.

நேரம் முன்னிரவு 10:05.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...