ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

உணர்வற்ற அலைபேசியோடு..

 

பொழுது விடிந்து

பொழுது போகும் வரை

உணர்வற்ற கைபேசியோடு

கரைந்து விடுகிறது...

உணர்வோடு உள்ள

மனிதனின்

பெரும்பாலான நேரங்கள்... 

உணர்வுகளை

அது புரிந்து கொள்ளாமல்

அந்த மனிதனின் சுக துக்கங்களை

உள் வாங்கவாவது செய்கிறது

உணர்வுள்ள மனிதனோ

அங்கே எவனோ தீன குரலில்

அழைத்து காதில் விழுந்தும்

விழாததை போல கடந்து

செல்லும் போது

வேறு வழியின்றி அவன்

மீண்டும்

உணர்வற்ற கைபேசியோடு 

தனது உணர்வுகளை

கரைத்து விட்டு

உள்ளுக்குள் குலுங்கி குலுங்கி

அழுகிறான்...

தேற்றுவதற்கு ஆள் இல்லாமல்

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...