ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 3 ஆகஸ்ட், 2022

ஆட்சியாளர்களை வழிநடத்துங்கள்


 இன்றைய தலையங்கம்:- உண்மையிலேயே மனசாட்சி உள்ள மனிதர் பிஜேபியின் இருக்கிறார்களா என்று தேடுகிறீர்களா..இதோ வருண் காந்தி தான் அவர்..

மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணம் மற்றும் இலவசத்தை நிறுத்துவதற்கு முன் நாம் நம்மை பற்றி நாம் அனுபவிக்கும் சலுகைகளை பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொல்லியதோடு இந்த விவாதத்தை முதலில் எம் பிக்கலின் ஓய்வூதியத் சலுகைகளை நிறுத்துவதை பற்றி நாம் ஏன் பேசக் கூடாது என்று நியாயமான கேள்வி ஒன்றை கேட்டு இருக்கிறார்..தமது டுவிட்டர் பக்கத்தில்..

மற்றொரு டுவிட்டர் பதிவில் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்ற #ஏழைகளில் 4.13லட்சம் பேரால் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கு பணம் இல்லை என்றும் 7.67 லட்சம் பேர் ஒரேயொரு முறை தான் மற்றொரு சிலிண்டர் வாங்கி உள்ளனர் என்றும் ஏழைகளின் எரிதல் அடுப்பு அணைந்து கிடக்கிறது என்றும் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது..

குறிப்பாக பிஜேபி ஆதரவாளர்கள் கவனிக்க வேண்டும்..

ஒரு கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்றால் கண் மூடித் தனமாக ஆதரிக்காமல் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.. அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள்..அதை விடுத்து தீவிர ஆதரவாளர்களாக மாறி வானத்தில் வெள்ளை காக்கா பறக்கிறது பாருங்கள் மக்களே என்று சொன்னால் அதற்கு ஆதரவாளர்களும் சேர்ந்து ஆமாம் ஆமாம் என்று ஜால்ரா போடக் கூடாது.. தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து அங்கே எங்கே வெள்ளை காக்கா பறக்கிறது என்று கேட்க வேண்டும்..

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...