ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 ஜூலை, 2022

தேஜஸின் பேரொளி நான்


 அங்கே என்னை

பார்த்ததும்

மரியாதை குறைவாக

நடத்த மணிக்கணக்கில்

கூட்டம் போட்டு முடிவெடுத்தார்கள்..

என் வருகைக்காக காத்திருந்தார்கள்

பேரமைதி அங்கே நிலவியது

ஒரு சில கணங்கள்...

திடீரென அங்கே நான்

அடியெடுத்து வைத்தேன்...

இத்தனை நேரம்

என்னை அவமானப்படுத்த

திட்டம் திட்டியவர்கள் உட்பட

அனைவரும் தன்னையும் அறியாமல்

எழுந்து நின்றார்கள்..

எனது தேஜஸை பார்த்து

மிரண்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...