ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 23 ஜூலை, 2018

பிடிவாதம்

அன்பர்களே வணக்கம்.
        இப்போது நாம் பார்க்க இருப்பது பிடிவாதம். என்ன நீங்கள் எல்லோரும் யாரையாவது இந்த குணத்தை உடையவர்களை கைகாட்டுவது எனக்கு தெரிகிறது. ஆம். நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் இந்த குணத்தை உடையவர்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்.அப்படி தானே அன்பர்களே.ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருக்கும் போது நாம் அடையும் எரிச்சலுக்கு அளவே இருக்காது.அப்படி நம்மை அவர்கள் படுத்தி எடுத்து விடுவார்கள்.
         ஒரு மனிதனை வாட்டி வதைப்பது பிடிவாதம் தான் என்று தெரிந்தும் ஏன் அதை விட மறுக்கிறார்கள் சிலபேர்.இதை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒரு விசயத்தை நாம் புரிந்துக்கொள்ள முடியும். அவர்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். அவர்கள் நினைப்பதை சாதிக்க வேண்டும். இவ்வளவு தான். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. மற்றவர்கள் முன்னால் அவமானப்படக்கூடாது.இது ஒரு முக்கிய காரணம்.
            சரி.ஒன்றை பிடிவாதம் பிடிப்பவர்களே புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் பிடிவாதத்தால் நல்ல விசயங்களை கூட இழக்க வாய்ப்பு உள்ளது. அதனால் எந்த விசயத்திற்கும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று உறுதியாக இருக்கக்கூடாது. அதனால் இழப்பு வந்தால் வேறு எவரும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் தான் தாங்க வேண்டும்.
    அதனால் அடுத்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கொஞ்சம் நீங்கள் காது கொடுத்து கேளுங்கள்.நீங்கள் அதையே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தோன்றாத ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு தோன்றி இருக்கலாம். நீங்கள் கூட யோசிக்கலாம். அடடே இதை எப்படி மறந்தேன் என்று. அதனால் நாலுபேர் சொல்வதை கேட்பதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் விசயம். நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
      பிடிவாதத்தால் நிறைய பேர் கெட்டபெயரும் புகழையும் இழக்கிறார்கள். நமது வறட்டு கொள்கையால் நாம் நல்ல பல விசயங்களை இழந்து விடக்கூடாது.
    நல்ல விசயத்தை பின்பற்றுவதில் சத்தியத்தில் நிலைத்து இருப்பதில் அடுத்தவருக்கு உதவுவதில் தமது கடமைகளை செய்வதில் நாம் பிடிவாதமாக இருப்பதில் தவறு இல்லை. ஆனால் சுயநலத்திற்காக விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பதில் தவறு உள்ளது.
      விட்டு கொடுப்பவர் என்றுமே கெட்டு போவது இல்லை. பெருந்தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடாது.அது இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கே வரும். அதனால் நாம் என்றும் பிடிவாதத்தை கைவிட்டு நல்ல விசயத்திற்காக விட்டு கொடுத்து ஆனந்தமாக வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...