ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 23 ஜூலை, 2018

கௌரவம்

அன்பர்களே வணக்கம்.
   இன்று நாம் பார்க்க இருப்பது கௌரவம். இன்று சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் விரும்புவது.முதலில் நாம் கௌரவம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.நாம் நமது உழைப்பில் சாப்பிடுவது.பிறர் பொருளை விரும்பாமல் இருப்பது. நாம் நமது நல்லொழுக்கத்தில் எப்போதும் கவனமாக இருப்பது. நல்ல செயல்களை செய்வது .நல்ல விசயத்தை நான்கு பேருக்கு சொல்வது.எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசுவது...இவைகளை போல இன்னும் இருக்கிறது.
     சரி.நாம் மேற்சொன்ன விசயங்களை கடைப்பிடித்தலே கௌரவம். ஆனால் தற்போது நாம் கௌரவம் என்கிற பெயரில் என்ன செய்கிறோம் என்று உங்களை நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்.
      நாம் நல்ல வருமானத்தை பெறுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.என்ன செய்கிறோம். முதலில் நாம் பயணம் செய்ய ஒரு ஆடம்பரமான காரை வாங்குகிறௌம்.பிறகு ஆடம்பர வீடு மேலும் சொகுசு வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை எல்லாம் வாங்கி வைத்து அனுபவிப்பதுதான் கௌரவம் என்று நினைக்கிறோம்.இது சரியானதுதானா.நமது தேவையை சுருக்கிக்கொண்டு நாம் பிறருக்கு உதவினால் நமது கௌரவம் சமூதாயத்தில் பலமடங்கு உயரும். மாறாக நாம் ஆடம்பர பிரியர்களாக இருந்தால் முகத்திற்கு நேரே நல்லவர்கள் போல மரியாதை கொடுத்து முதுகிற்கு பின்னால் மோசமாக பேசுவார்கள். மேலும் அவனிடம் வசதி இருந்து என்ன பயன் என்று தூற்றுவார்கள்.அப்போது நாம் நினைக்கும் கௌரவம் எங்கே போய் ஒளிந்து கொள்ளும்?.சிந்திப்பீர்.
     மேலும் கௌரவம் என்பது நாம் ஆடம்பரமாக வாழ்வதில் எப்போதும் இல்லை. அது நமது கற்பனை. நன்றாக யோசித்து பார்த்தால் நமது அடிப்படை தேவைக்கு மேலே நாம் செலவு செய்தால் அது அடுத்தவர் சொத்தை திருடியதற்கு சமம்.
          ஒரு மனிதன் அவனது உழைப்பில் வாழும் போது இயல்பாகவே சமுதாயத்தில் அவனது மதிப்பு கூடி அவனுக்கு கௌரவம் சேர்க்கிறது. ஒருவன் ஏட்டு படிப்பு படித்து விட்டு கௌரவம் பார்த்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சுற்றி திரிந்தால் அவனது கௌரவம் அங்கே நசுக்கப்படுகிறது.அதனால் இளைஞர்களே எந்த வேலையிலும் எப்போதும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை. சேற்றில் இறங்குவதை ஒரு விவசாயி கேவலமாக நினைத்தால் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான்.அதனால் எது கௌரவம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
      ஒருவன் எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவர்கள் கொடுப்பதை வாங்காமல் தனக்கு கிடைத்ததை மட்டும் வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்.அவர்கள் கௌரவமானவர்கள்.
      நாம் எந்த சூழ்நிலையிலும் நல்லொழுக்கத்தில் வாழ்வோமேயானால் அது எவ்வளவு கௌரவமான செயல் என்பது உணர்ந்தவர்களுக்கே தெரியும். அரிச்சந்திரன் எந்த சூழலிலும் சத்தியத்தை கடைப்பிடித்ததைப்போல நாமும் எந்த சூழலிலும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் நிச்சயமாக கௌரவமான மனிதர்கள் தான். நம்மை பற்றிய மரியாதை சமுதாயத்தில் கூடும் போது நமது கௌரவம் நம்மில் பூத்து மணம் வீசும்.
       நம்மை பற்றி பிறர் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்கக்கூடாது.நம்பிக்கை என்பது நாம் சேர்க்க வேண்டிய சொத்து. இன்று நமது சமுதாயத்தில் சத்தமே இல்லாமல் நம்பிக்கைக்கு உரியவர்கள் மறைந்து கொண்டே வருகிறார்கள். நம்பிக்கைக்கு உரியவரை தேடி கண்டுபிடிக்க வேண்டியதாய் உள்ளது இந்த கலியுகத்தில். அதனால் அடுத்தவர்கள் உங்கள் வைத்த நம்பிக்கையை எக்காரணத்தையும் கொண்டும் இழந்து விடாதீர்கள்.
       என்ன நேயர்களே கௌரவம் என்றால் என்ன என்று இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.உங்களிடம் உள்ள மோசமான கௌரவத்தை ஒழித்து உண்மையான கௌரவத்தை கடைப்பிடித்து ஆனந்தமாக வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...