ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

வைராக்கியம்

அன்புடையீர் வணக்கம்.
   இன்று நாம் பார்க்க இருப்பது வைராக்கியம்.இன்றைய வாழ்வில் மக்களுக்கு தேவையான ஒன்று.தேடினாலும் கிடைக்காது. இன்றைய சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் பலருக்கும் திகைப்பாகத்தான் இருக்கிறது.
      அது சரி.நாம் நமது தலைப்பின் பொருளை அறிந்துக்கொள்வோம்.முதலில் வைராக்கியம் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டு பாருங்கள். பலரும் பலவிதங்களில் சொல்வார்கள். ஆனால் அதன் உண்மை தன்மையை சொல்பவர்கள் மிகவும் சிலரே.
          வைராக்கியம் என்றால் பலரும் பிடிவாதத்தை அதனோடு சேர்த்து பொருள் சொல்கிறார்கள்.அது அல்ல வைராக்கியம் என்பது.வைராக்கியம் என்னும் அழகான பழக்கத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். வைராக்கியம் என்பது பலரும் நினைப்பது போல பிடிவாதம் இல்லை. அதை முதலில் நீங்கள் மனதில் பதிய வையுங்கள்.
         இன்றைய இளைஞர்கள் தன்மானம் மிக்கவர்களாக பலரும் இருப்பது நல்ல விசயமே.ஆனால் மிக சிலபேர் தன்மானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு முதலில் ஒழுக்கத்தில் வைராக்கியம் வேண்டும். நல்ல ஒழுக்கத்தை விட்டு எந்த சூழலிலும் விலக மாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்க வேண்டும்.
     நல்ல ஒழுக்கத்தை எந்த சூழலிலும் விடாமல் கடைப்பிடித்தால் வரும் நன்மைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிறுவயதில் இருந்து அந்த பழக்கத்தை நாம் வலியுறுத்தி இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல அழகாக நடைப்போடும்.எந்த வித இடையூறுகளும் அவர்களை நெருங்காதவாறு அவர்கள் வைராக்கியம் அவர்களை பாதுகாக்கும்.
       ஒருவன் எந்த சூழலிலும் சத்தியத்தை விடாமல் பின்பற்றினால் நம் சமுதாயம் எவ்வளவு அழகாக இருக்கும். நினைக்கவே நன்றாக உள்ளது. இதை நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் முக்கியமாக அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். நம் சமுதாயம் ஊழலுக்கு விலைபோகாத சமூகமாக இருக்கும்.
         மற்றொன்று இன்பம் துன்பம் இரண்டிலும் சமமாக இருக்கும் பண்புகள் நம்மிடம் இருந்தால் சமமாக பாவிக்கும் மனப்பான்மை இருந்தால் நாம் நிம்மதியாக இருப்போம். அதற்கு நம் மனதில் வைராக்கியத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டால் தான் இயலும். இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பான்மை வைராக்கியம் கொண்டவர்களுக்கே வரும்.
       மேலும் இந்த உலகம் மாயை.அதன் மாயையில் நாம் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கை படகை மிகவும் நிதானமாக செலுத்த பழக வேண்டும். இந்த உலகத்தின் மேல் நாம் எந்தவித பற்றுதலையும் வைக்காமல் இருக்க வைராக்கியத்தை நாம் துணைக்கொள்ள வேண்டும்.
          நமது வாழ்க்கை தேவைகளை குறைத்து கொள்வதில் நமக்கு மிகவும் தேவையான ஒரு பண்பு வைராக்கியம்.ஆனால் இன்றைய இளைஞர்கள் பலர் கற்பனை வளர்த்து கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள்.இப்படி வாழ்வதற்கு அதாவது தேவைகளைக் குறைத்து வாழ நிறைய வைராக்கியம் வேண்டும்.
     இன்றைய வாழ்க்கையில் நல்ல பல பண்புகள் வளர வைராக்கியம் என்கிற பண்பு மிகவும் அவசியம் ஆகிறது.அதனால் நமது குழந்தைகளை பொருள்களுக்கு அடிமைப்படுத்தாமல் அதிலிருந்து விலகி இருப்பதற்கான வைராக்கியத்தை வளர்க்க நாம் துணை நிற்போம். அதாவது தேவைக்கு மட்டும் பொருட்களை பயன்படுத்த அனுமதி அளிப்போம்.
    என்ன நேயர்களே நான் சொல்வதை நீங்களும் கடைப்பிடித்து உங்கள் குழந்தைகளையும் கடைபிடிக்க வைத்து ஆனந்தமாக வாழ்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 

2 கருத்துகள்:

  1. பெயரில்லா30 மே, 2023 அன்று 7:50 AM

    Aam sir.nan vairaakkiyathodu valvathai thavaraga purinthu kolkirarkal.

    பதிலளிநீக்கு
  2. அது அவர்கள் புரிதல்.
    தாங்கள் மிகவும் தெளிவாக இருங்கள்.வாழ்க்கை உற்சாகமானது..✨😊❤️

    பதிலளிநீக்கு

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...