ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 ஜூலை, 2018

நிபந்தனை

அன்புடையீர் வணக்கம்.
         நாம் இப்போது பார்க்க இருப்பது நிபந்தனை. என்ன நினைக்கிறீர்கள் நிபந்தனையை பற்றி. நான் உங்களுக்கு இதை பற்றி விளக்க வேண்டிய நிபந்தனை. ஆம் நேயர்களே. நாம் அனைவரும் ஏதோவொரு கண்ணுக்கு தெரியாத தெரிந்த நிபந்தனைகளால் கட்டுப்பட்டு இருக்கிறோம். ஒருசிலர் அதை உணர்கிறோம். ஒருசிலர் அதை உணராமலே கடக்கிறோம்.
          நாம் இப்போது பயன்படுத்தும் கைபேசியில் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே பயன்படுத்துகிறோம்.இந்த கைபேசியில் எத்தனை பேர் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஒழுங்காக படித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதே பல மில்லியன் டாலர்கள் கேள்வி. ஆனால் நாம் எதையும் கண்டு கொள்ளாமல் தற்போதைக்கு அதன் பயன்பாடு கிடைத்தால் போதும் என்றே மனதளவில் நினைத்து படிக்காமல் நிபந்தனை ஏற்றுக்கொண்டு பல இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறோம்.
      சரி.நாம் மற்ற நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். நாம் திருமணத்தின்போது ஒருவரை பந்தத்துக்குள் இணைத்தஇணைத்துக்கொள்ள சாஸ்திரம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொள்கிறோம்.ஆனால் அந்த சாஸ்திரம் சொன்னதை புரிந்து தான் ஒப்பு கொள்கிறோமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.
      ஏன் என்றால் நாம் மந்திரங்களை புரிந்து சொல்வது இல்லை. சமஸ்கிருத மந்திரத்தை யாரோவொருவர் ஓத நாம் அதை வழிமொழிகிறோம்.அது என்ன என்று தெரியாமலே.அதனால் வாழ்க்கை பந்தத்தில் நுழைவதற்கு முன்னால் நீங்கள் அந்த பந்தத்தின் நிபந்தனைகள் என்ன என்று நன்கு கற்று அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பிறகு நுழைந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை மதித்து நடப்பீர்கள்.ஏனெனில் ஆயிரம் விசயங்களை அந்த மந்திரங்கள் நமக்கு சொல்கிறது.அதை உங்கள் மொழியில் நீங்கள் தெரிந்து பிறகு திருமண பந்தத்தில் இணையலாமே.அப்போது எந்தவித பிணக்கும் தம்பதிக்குள் வர சாத்தியமே இல்லை.
                 மற்றொரு விசயம் என்னவென்றால் நீங்கள் முதலீடு செய்வது.ஒரு திட்டத்தில் அதாவது சேமிப்பு திட்டத்தில் நுழைகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்கள் கொடுத்த நிபந்தனைகளை படிக்காமல் தயவுசெய்து கையெழுத்து பௌடாதீர்கள்.அது உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும்.குருவிப்போல மக்கள் சேர்த்த பணங்களை மக்கள் இழப்பது எதனால் என்று சிந்தித்தீர்களா.அவர்கள் எல்லாம் அந்த நிபந்தனைகளை படிக்காமல் கையெழுத்து போட்டவர்களே.இதில் நன்கு படித்த மேதாவிகளும் அடங்குவர். ஏனெனில் அவர்கள் ஓடுவதற்கு மட்டுமே நேரத்தை ஒதுக்குபவர்கள்.அந்த ஓட்டத்தால் பெற்ற பயனை பாதுக்காக்க தெரியாமல் அடுத்தவர்கள் அனுபவிக்க விடும் மேதாவிகள்.
              நிபந்தனைகள் இப்படி தான் நம்மை வாழ்க்கையின் எல்லா மூலையில் இருந்தும் துரத்தி கொண்டே இருக்கும். நாம் அந்த நிபந்தனைகளை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு தான் நஷ்டம். வாழ்க்கை என்பது இப்போது எல்லா நிலைகளிலும் நிபந்தனைகளால் ஆக்கப்பட்டது.நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருந்தால் எப்போதும் ஆனந்தம் தான். இல்லை என்றால் அழுகைதான்.நாம் நமது பேராசையை விடுத்து ந்தமான வாழ்க்கை வாழ முற்பட வேண்டும். என்ன நேயர்களே சரிதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...