ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 ஜூலை, 2018

நிலையாமை

அன்புடையீர் வணக்கம்.
                   இன்று நாம் பார்க்க இருப்பது நிலையாமை.ஆம். எதுவும் நிலையில்லை என்று தெரிந்தும் நாம் எல்லாவற்றின் மீதும் ஆசைப்படுகிறோம்.என்ன ஒரு விந்தை.பொதுவாகவே ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. எதை கொண்டு வந்தோம் ஏன் இவ்வளவு ஆசைப்படுகிறோம் என்று. ஆனால் அதை வாய்சவடாலாக மட்டும் பேசிவிட்டு செயலில் காட்ட மறுக்கிறோம்.
           நாம் இந்த மண்ணில் பிறந்து விட்டோம். ஏதோவொரு காரியத்தை சாதிப்பதற்கே நாம் இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வந்த வேலையை மறந்து விட்டு வேறு வேலையில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறோம். இதை கிராமத்தில் கூட விளையாட்டாக சொல்வார்கள். ஒருவனிடம் ஒரு வேலையை கொடுத்து விட்டு அவன் சம்பந்தப்பட்ட அந்த வேலையை செய்யாமல் வேறு வேலையில் ஈடுபட்டால் ஒன்று கிடக்க ஒன்று ஏன் செய்கிறான் என்று கேள்வி கேட்பார்கள். அதைத்தான் நாம் இப்போது பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
        இறைவன் நம்மை ஒரு வேலைக்கு கணக்கிட்டு அனுப்ப நாமோ அவர் இட்ட வேலையை விடுத்து வேறு வேலையில் மும்முரமாக செய்து கொண்டு இருக்கிறோம். நாம் பிறந்தது முதல் நமக்காக ஆயிரம் வேலைகள் கடமைகள் இங்கு உள்ளது. நாம் கல்வியை கற்று சம்பாதிப்பது மட்டுமே கடமை என்று நினைக்கிறோம்.
     எதையும் பணத்தால் அளவிடுகிறோம்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம்.நான் இப்படி நம்புபவர்களிடம் ஓன்றை கேட்கிறேன்.பணத்தால் ஆத்ம ஞானத்தை விலைக்கு வாங்க முடியுமா?.இந்த ஒரே கேள்வியில் அத்தனை பேர்களும் அடித்து வீழ்த்தப்படுவீர்கள்.இந்த கேள்வி ஏன் எனில் கண்டிப்பாக முடியாது என்று தெரிந்தும் ஏன் இறுதி வரை அதன் பின்னாலே மட்டும் நாம் போக வேண்டும். இதுதான் என் கேள்வி.
         மனிதர்களே ஒன்றை நான் உங்களிடம் நிச்சயமாக சொல்ல முடியும். நீங்கள் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் அதற்காக எதையும் இழக்க தயாரானால் நீங்கள் இந்த பிறவி எடுத்ததே வீண். மாறாக நீங்கள் இந்த பிறவியை வீணடிக்கிறீர்கள்.
           நீங்கள் சேர்த்து வைத்த சொத்தை பிரித்து செல்வதற்கு உங்கள் பிள்ளைகள் கண்கொத்தி பாம்பாக இருக்கிறார்கள். உங்கள் உறவுகள் உங்கள் முன்னேற்றத்தை நினைத்து வயிறு எரிந்து சாகிறார்கள்.உங்கள் நண்பர்கள் அதாவது மோசமான நண்பர்கள் உங்கள் வீழ்ச்சியை நினைத்து பாய்விரித்து காத்திருக்கிறார்கள்.உங்கள் மனைவி நீங்கள் அவர் கேட்பதை வாங்கி வாங்கி தரும் வரை மட்டுமே உங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
          இத்தனை விசயங்கள் இருந்தும் போலியான மனிதர்கள் இருந்தும் ஏன் நீங்கள் இந்த மாயை பின்னால் ஓடுகிறீர்கள்?.இறப்பதற்கு முன்னால் உங்கள் ஆன்மா கடைத்தேற ஏன் ஒரு சிறுஅடி கூட எடுத்து வைக்கவும் மாட்டேன் என்கிறீர்கள்?
                  நீங்கள் எத்தனை விதமான சொத்துக்கள் சம்பாதித்தாலும் அவற்றிலிருந்து எவ்வளவு தூரம் ஆடம்பரமாக அனுபவித்தாலும் ஒன்றும் உங்கள் பின்னால் வரப்போவது இல்லை. அத்தனையும் அழிவுக்குரியது.அழிவுக்கு உரியதன் மேல் இவ்வளவு பற்று உள்ள உங்களுக்கு அழியாத ஆன்மா மேல் ஏன் பற்று வரவில்லை. இங்கே தான் மாயாசக்தி அவள் பிடியில் உங்களை வைத்திருக்கிறாள்.
           மாயாசக்தியின் கைப்பிடியில் இருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். நிலையாமையை பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மாயை நீங்கள் உள்ளது உள்ளபடி உணர்ந்து கொண்டால் நீங்கள் ஆன்மாவை நோக்கி முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்.
        ஆத்மஞானத்தை நீங்கள் அடைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தான். ஆத்மஞானத்தை அடைந்தால் நிச்சயமாக உங்களாலும் ஆனந்தமான வாழ்க்கை வாழமுடியும். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...