ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 17 ஜூலை, 2018

கவலைகள்

அன்பர்களே வணக்கம்.
     இன்று நாம் பார்க்க இருப்பது கவலைகள்.சிலர் எப்போது பார்த்தாலும் எதற்காகவாவது கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் கவலை மிகவும் வித்தியாசமாக இருக்கும் .சிலருக்கு எரிச்சல் கூட வரும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தேவை கவலைப்படும் உணர்வு.
   சரி இன்னும் சிலப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் நடந்த சோகங்களை சொல்லி சொல்லசொல்லியே மற்றவர்களை கவலையடைய வைத்துவிடுவார்கள்.ஏன் இந்த கவலைகளை மூட்டை கட்டி கொண்டு திரிகிறார்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது.
       சரி விசயத்திற்கு வருவோம். ஒரு மனிதன் எப்போது பார்த்தாலும் கவலையில் இருந்தால் அவனுக்கு எதிர்மறை சிந்தனைகளே அதிகமாகி அவனின் செயல்திறனை குறைத்து விடும். எப்போதும் உற்சாகமாக இருப்பவர்களை பாருங்கள். அவர்களால் எளிதாக பல காரியத்தை சாதித்து இருக்க முடியும். ஆனால் கவலையும் சோகமும் உடையவர்கள் எளிதான காரியத்தை கூட கோட்டை விட்டு விடுவார்கள்.
   அதனால் எதிர்மறை சிந்தனை உடையவர்களிடம் நெருங்கி பழகாதீர்கள்.முடிந்தால் அவர்களை நீங்கள் திருத்த பாருங்கள். இல்லை என்றால் விலகிவிடுங்இள்.உங்கள் நேர்மறை சிந்தனைகள் அவர்களோடு இருப்பதால் உங்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.
    மனிதர்களே எதற்காக கவலை?கவலைகளால் தோல்விகளும் மன இறுக்கமுமே அதிகமாகும். அதனால் கவலைகளை தூக்கி போட்டு விட்டு ஆகவேண்டிய காரியங்களை பாருங்கள். நான் தங்களிடம் கவலைகளே வேண்டாம் என்று சொல்லவில்லை. அதிலேயே மூழ்கி இறந்து விடாதீர்கள். கொஞ்ச நேரம் மட்டுமே அதற்கு கொடுங்கள் .
     பிறகு உனது நேரம் முடிந்து விட்டது. நீ செல்லலாம் என்று தயவுதாட்சயம் இல்லாமல் சொல்லி விடுங்கள். இறைவன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்றே பார்க்கிறார்.அவர் வைத்த தேர்வில் வெற்றி அடையவே அவர் விரும்புகிறார்.
   தருணங்களை எண்ணி காத்திருங்கள். கவலைகளை கடந்து ஆனந்தமாக வாழ முடிவு செய்யுங்கள்.என்ன அன்பர்களே உங்கள் கவலைகளை மூட்டை கட்டி பரண் மேல் போட முடிவு செய்து விட்டீர்களா.வாருங்கள் சாதிக்க நிறைய விசயங்களை இந்த மண்ணில் இறைவன் கொட்டி வைத்து இருக்கிறார். அதை நோக்கி நம் பயணத்தை தொடர்வோம்.
   எல்லோரும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...