இந்த அந்தி சாயும் நேரத்தில் நான்
ஏதேதோ வழக்கமான
நிகழ்வை பூரணமாக
முடித்து விட்டு காத்திருக்கும் போதும்
ஏதோ ஒன்று எனை
குறையாக நினைக்க வைத்து
என்னை தடுமாற
செய்தது...
அது என்ன என்று யோசித்து
யோசித்து களைத்து விட்டபோது
எங்கிருந்தோ சன்னல் வழியாக வந்த
அந்த காற்று என் மேசை மீது இருந்த
அந்த வெற்று காகிதத்தை
என் காலை
உரசி போட்டு விட்டு போனது...
இதோ அந்த வெற்றுத் தாள் மீது
எனது தீவிரமான கிறுக்கல்கள்
தொடங்கி விட்டது...
இப்போது நான் விடுதலையாகிறேன்
ஏதோ ஒன்றாக இருந்து என்னை
இதுவரை இம்சையடைய செய்த
அந்த குறைப்படுதலில் இருந்து...
மெல்ல மெல்ல...
#அந்தஏதோவொரு #குறைப்படுதலிலிருந்து
#விடுபடுகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 19/04/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக