இந்த பிரபஞ்சத்தின்
வரைமுறைகள் எது
என்று
சரியாக புலப்படவில்லை எனக்கு...
ஏதோவொரு விதியின்
வரைமுறையில் தான்
இந்த பிரபஞ்சத்தின்
பிறழாத சுழல்தல் நிகழ்கிறது
என்பது மட்டும் எனக்கு
நன்றாக தெரியும்...
அந்த பிறழாத சுழல்தலில்
எங்கோ ஒரு புள்ளியாக நான்
நின்றுக் கொண்டு இருக்கிறேன்...
நான் எந்த அசைவும் இல்லாமல்
வெறுமனே
நின்றுக் கொண்டு
என் பிறவி வேரை அறுத்து
விடை பெற்று பறந்து
செல்லும் போது
கீழே உள்ள பல சம்சாரிகள்
என் இறகின் நிழல் ஏதோவொரு வகையில் பட்டு விடாதா என்று
ஏங்கி என் பின்னால் ஓடி வருகிறார்கள்...
நான் அவர்களுக்காக
என்னில் இருந்து
வெகு பிரயணத்தோடு
ஒரு சிறு இறகை உதிர்க்கிறேன்...
அதை பிடிக்க ஆயிரம் ஆயிரம் பேர்
ஓடோடி வருகிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:-27/04/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக