அந்த வெறுமையோடு கூடிய
பயணத்தை
நான் பயணித்துக் கொண்டு
இருக்கிறேன்...
ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு
சத்தம் இல்லாமல் பயணிக்கிறது...
நான் அந்த ஆழ்ந்த அமைதியிடம்
சற்றே
என்னை தனியாக பயணிக்க விடு
என்கிறேன்...
நானும் உன்னை போல
அந்த வெறுமையை நேசிக்கும் பயணி தான்...
ஒரு துணையும் இல்லாமல் பயணிக்கும் உனக்கு ஒரு துணையாக உன்னோடு
நான் பயணிக்கக் கூடாதா
என்றது சற்றே
முகத்தை சோகமான
பாவனையில் வைத்து...
நான் கொஞ்சம் தடுமாறி
பின்னர் தலையசைத்து
அதனோடு கொண்ட பற்றை
வேகமாக அழித்து விட்டு
விறுவிறுப்பாக நடக்கிறேன்...
இதை வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்த காலமோ
சற்றே எனது சிறுபிள்ளைத்தனமான
பிடிவாதத்தை ரசித்து
சிரித்து எங்களை நிழலாக
தொடர்வதை நாங்கள் அறியாமல்
பயணிக்கிறோம்
அந்த வெட்டவெளியில்...
#நானும்வெறுமையும்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/05/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக