நான் வாழ்கிறேன் என்று அங்கே
பலபேர் கூச்சலிட்டு
ஆடி பாடி போகும் போது நான்
அமைதியாக அந்த நிகழ்வை
ரசித்து விட்டு
நான் எனது பார்வையை
திருப்புகிறேன்...
நீ அப்படி ஒன்றும் பெரிதாக
வாழ்ந்து விடவில்லை என்று
நினைத்து அந்த நிகழ்வில் இருந்து
விடுபட்டு கொண்டாயோ என்று
காலம் என்னை கேலி செய்தபோது
நான் புன்வறுவலோடு
நீ சொல்வது ஒரு வகையில்
சரி தான் காலமே...
நான் எனக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும்
சிறிதும் மிச்சமில்லாமல்
ரசித்து விடுவதை தவிர
வேறொன்றும் செய்வதில்லை
என்றேன்
மிகவும் நிதானமாக...
காலமோ நீ எப்போதும்
வேடிக்கை மனுஷி தான் என்று இரு பொருள் பட
பேசி விட்டு கலகலவென்று
சிரித்து கொண்டே நகர்ந்தது...
#நான்வேடிக்கைமனுஷி
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/04/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக